Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம்

ADDED : அக் 01, 2012 09:10 AM


Google News
Latest Tamil News
* எல்லா வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும், மனத்தூய்மை இல்லாவிட்டால் அதனால் பயன் இல்லை.

* ஆரோக்கியமும், மனவலிமையும் பெற்றவர்கள் ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய முற்பட வேண்டும்.

* நீதிபோதனைகளை மற்றவர்க்கு எடுத்துச் சொல்வது எளிது. ஆனால், கடைபிடிப்பது கடினம்.

* தேடும் செல்வம் நம்மோடு வரப் போவதில்லை. அதனால், நம்முடைய பணம், பொருள், அதிகாரம், பெருமை அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிப்போம்.

* செய்யும் தொழிலே தெய்வம். எந்தப் பணியும் உத்தமமானது தான். அதில் விருப்பத்தோடு ஈடுபடும்போது அதன் மதிப்பு கூடுகிறது.

* மனித வாழ்வை மரத்திற்கு ஒப்பிட்டால், நல்ல பண்பாட்டை வளர்க்கும் கல்வி அதன் வேராக அமைந்துள்ளது.

* அன்பு வழியில் கடவுளின் திருவடியில் பக்தி செலுத்துங்கள். குழப்பம் நீங்கி நிம்மதி பெறுவீர்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us